சென்னை: தமிழக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) தனிப்பெரும்பான்மை பெறும் நிலைக்கு வெகு அருகில் வந்துள்ளது. தற்போது கட்சியிடம் 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சட்டசபையில் தனிப்பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால் தற்போது நான்கு தொகுதிகள் காலியாக உள்ளதால், 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதுமானது. அதாவது, த.வெ.க.,வுக்கு இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், த.வெ.க., தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட வெளி ஆதரவு இல்லாவிட்டாலும், தற்போதைய கூட்டணி பலத்துடன் பெரும்பான்மையை உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.

மேலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்து, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றால் த.வெ.க., அங்கு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. எண்ணிக்கையை எளிதில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த உத்தியை நோக்கியே த.வெ.க., தலைமை தீவிரமாக நகர்ந்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்த தீவிர ஆலோசனை! அடுத்த சிக்ருக்கு ரெடியாகும் முதல்வர் விஜய்!!
ஏற்கெனவே சில எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் த.வெ.க.,வுக்கு ஆதரவு தரும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் தகவல்கள் பரவி வருகின்றன. திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஏற்கெனவே காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், சாத்தியமான புதிய இடைத்தேர்தல்களும் த.வெ.க.,வுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. த.வெ.க., தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டால், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் குறையும் என்பதால், அவர்களும் இந்த விவகாரத்தைக் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர்.
த.வெ.க., தலைமை இந்த இலக்கை அடைய தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!