தமிழக வெற்றி கழகம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கு விழது இன்று நடைபெற்றது. சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணக்கர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை விஜய் வழங்கினார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாணவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கடந்த 30 ஆம் தேதி முதல் கட்ட விழா நடந்து முடிந்தது.

முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 88 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற520 க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக நின்றுபாராட்டு சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் விஜய் வழங்கியிருந்தார். இன்று இரண்டாம் கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இன்று தர்மபுரி ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 75 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரியை சேர்ந்த ஏழு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு விஜய் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!
வழக்கம் போல விஜயிடம் பாராட்டு சான்றிதழை பெற வந்த மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் நின்று விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். கடந்த முறையைப் போலவே இந்த முறையும் விஜயை இளைய காமராஜர் என மாணவி ஒருவர் புகழ்ந்துரைத்தார். பாராட்டு சான்றிதழ்களைப் பெற மேடைக்கு வந்த பல மாணவ, மாணவிகள் தமிழக வெற்றிக் கழகம் அடுத்த முறை ஆட்சி கட்டிலில் அமரும் என்றும், தளபதி விஜய் சி.எம்.ஆக பதவியேற்பார் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். அதில் ஒரு சுட்டிப்பையன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுவன் “2026 விஜய் அப்பா தான் சி.எம்.-ஆ வருவாரு, 2031 விஜய் அப்பா தான் சி.எம்.ஆ வருவாரு” என்கிறார். அந்த சிறுவன் மீண்டும் விஜயிடம் மைக்கை கொடுக்கும் போது அவன் கையைப் பிடித்து “யாருடா உனக்கு இதை சொல்லிக்கொடுத்தா?” என விஜய் செல்லமாக கேட்க அந்த சிறுவன் சிரித்துக்கொண்டே மேடையை விட்டு ஓடிவிடுகிறார். தன்னை மாணவ, மாணவிகள் அப்பா, அப்பா என்று அழைப்பதாகவும், அதனைக் கேட்கும் போது தான் பேரானந்தம் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரங்களைச் சுட்டிக்காட்டி, அப்பா ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இப்போது இந்த சுட்டிப்பையன் விஜயை அப்பா என அழைத்தது மட்டுமின்றி, திமுகவுக்கு சவால் விடும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆப்பு வச்சிட்டியே ஆதவ்.. தலையில் அடித்துக்கொள்ளும் விஜய்.. சிக்கலில் தவெக!