10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் கழகத்தை சேர்ந்த வட்டச் செயலாளரை ராயபுரம் அனைத்து மகளின் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி வடசென்னை ஆர். நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் சிங்காரவேல் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு சென்றிருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி 10 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு தினேஷ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
தினேஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் அந்த பத்து வயது சிறுமி தனது வீட்டிற்கு சென்றவுடன் தன்னுடைய சித்தியிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற கடந்த மூன்றாம் தேதி இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காசிமேடு காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார்கள்.
போக்சோ வழக்கு என்பதால் காசிமேடு போலீசார் இந்த வழக்கினை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பதிந்திருப்பதன் பெயரில் அங்கே வழக்குப்பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் நான்காம் தேதியே தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர். ஆனால் தினேஷ் ஆர். கே நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு என்னும் மையத்திற்கு சென்றிருந்ததால் இவரை கைது செய்ய முடியாத சூழலானது ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "தவெகவிற்கு ஆதரவளிக்க போவதில்லை..." - முக்கிய கட்சியில் இருந்து வந்த அதி முக்கிய அறிவிப்பு..!
அதனை தொடர்ந்து நேற்று இரவு தினேஷை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட தினேஷ் 43வது வார்டு தமிழக வெற்றி கழகடைய வட்டச் செயலாளர் என்பதும் அவர் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன் சேர்ந்து காசிமேடு பகுதிகளிலே பெரும்பா இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி மக்களை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இருக்கக்கூடிய கட்சி நிர்வாகிகள் பரப்புரை மேற்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அந்த கட்சியிலிருந்து தற்போது ஒரு வட்ட செயலாளர் இவ்வாறு 10 வயது சிறுமையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறீயதாக கைது செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே விஜய்க்கு பேரதிர்ச்சி... தவெகவினர் 6 பேர் கொத்தாக கைது... ஓவர் அட்ராசிட்டிக்கு ஆப்பு வைத்த போலீஸ்...!