விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் விரைவில் இணைவார்கள். நம்பிக்கையுடன் உறுதியாக இருங்கள் என்று தவெக தலைமையிடமிருந்து அறிவுறுத்தல்களும் நம்பிக்கையும் கிடைக்கப்பெற்றிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம். தனி பெரும்பான்மையில் வெற்றி பெறாத காரணத்தினால ஆட்சி அமைப்பதற்கு இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது பெரும்பான்மையை நிரூபிக்க திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கோறியிருந்தனர். ஆனால் காங்கிரஸ் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இன்னும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய முடிவை தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை கூட்டம் பனையூரில் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.
அப்பொழுது அவர் பேசுகையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் நம்முடன் இணைவார்கள். எதையும் நினைத்து குழம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக நம் சட்டமன்றத்திற்கு செல்வோம், விஜய் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். எத்தனை கோடி ரூபாய் உங்களுக்கு கொடுத்தாலும் விஜயனுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!
இந்த சூழலில் தான் மீண்டும் இன்று எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் எனும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கண்டிப்பாக பெரும்பான்மை இன்று நிரூபிக்கும் என்று நம்புகிறது. இந்நிலையில் ஒருவேளை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கிற பட்சத்தில் இன்றே ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பதவியேற்பு விழாவிற்கான தேதியை தமிழக வெற்றி கழகம் குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் தான் தமிழக வெற்றி கழக தலைமை எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் விதமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கிறார்கள். அதேபோல நேற்றைய தினம் விஜய் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். அந்த ஆலோசனையில ஒவ்வொரு மாநில நிர்வாகிகளும் திமுக கூட்டணி கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரித்து இருந்தார்கள். இதனிடையே, இன்று நடைபெற இருக்கக்கூடிய உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பிறகு திருமாவளவன் முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவருடைய கட்சி தலைமையில் நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று நம்புகிறது.
இதையும் படிங்க: விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!