2025ம் ஆண்டிற்கான விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: ஈரானின் அணு உலைக்களங்களில் யுரேனியம் செறிவூட்டுகிற பாதாள அறைகளை குறிவைத்து தாக்குகிற அளவுக்கு ஆயுதங்கள் இன்றைக்கு இஸ்ரேலிடம் இருக்கிறது பதிலடி கொடுக்கிறது. அளவுக்கு வலிமை ஈரானுக்கு இருக்கிறது. வம்புக்கே தலையீடு செய்து ஈரானை அச்சுறுத்துகிற அளவுக்கு அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த நாடுகளிடம் எல்லாம் பூமியை பலமுறை அழித்தொழிக்க கூடிய அளவுக்கு அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட அணு ஆயுதங்களால் தகர்க்க முடியாத ஒன்று இந்தியாவிலே சாதிய சமூக கட்டமைப்பாக இருக்கிறது. எந்த ஆயுதங்களாலும் தகர்க்க முடியாது ஏனென்றால் இது கருத்தியல் வடிவம் கொண்டிருக்கிறது. கெட்டிதட்டி போய் இருக்கிறது. உளவியல் அடிப்படையில் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கு இங்கே ஒருஅரசும் தேவைப்படுகிறது. அந்த அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவு.

ரொம்ப சிம்பிளா கேட்கிறான், எல்லா நாடுகளும் ரிலிஜியன் ஸ்டேட் ரிலிஜியன் இருக்கு ஏன் இந்தியாவில் இருக்க கூடாது இருக்க முடியாது அரச மதம் இலங்கைக்கு புத்திசம், அரச மதம் பாகிஸ்தானுக்கு இஸ்லாம். அமெரிக்காவுக்கு கிறிஸ்டியானிட்டி. தெற்காசிய நாடுகள் முழுவதும் பௌத்தம் அரச மதமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கிறித்தவம் அரச மதமாக இருக்கிறது. அராபிய நாடுகள் முழுவதும் இஸ்லாம் அரசு மதமாக இருக்கிறது. ஏன் இந்தியாவுக்கு அரசு மதம் கூடாது நல்ல கேள்வி. தர்க்க அடிப்படையிலே இது சரி, ஆனால் எந்த மதத்தை இந்தியாவின் அரசு மதமாக்க முடியும். இங்கே பெரும்பான்மை மக்கள் பின்பற்றக்கூடிய மதம் எது பாகுபாடுகள் நிறைந்த மதம் அல்லவா இங்கே பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகிற மதமாக இருக்கிறதே?. ஒரு காலத்திலே இது இந்து மதம் என்ற ஒரு வடிவம் கிடையாது.

முருகனுக்கே தனி மதம் இருந்தது. நாம் கும்பிடுகிற முருகனுக்கு கௌமாரம் என்ற பெயரிலே வடமொழியிலே குமாரம் தமிழ்ல சொன்னா குமாரம் அப்படிங்கிற ஒரு மதம் இருந்ததுங்க அதான் ஆறு மதங்கள் சைவம், வைணவம், கணபதியை கும்பிடுறது அந்த மதத்துக்கு பேரு காணபத்தியம், கௌமாரம் முருகனை கும்பிடுவது, சௌரம் சூரியனை கும்பிடுவது, சாத்தம் சக்தியை கும்பிடுவது இதெல்லாம் மதங்களின் பெயர் வடமொழியிலே சான்ஸ்கிரிட்ல இந்த ஆறு மதங்களை ஒருங்கிணைத்துதான் இந்து மதம் என்று இன்றைக்கு அழைக்கிறார்கள். இதெல்லாம் தனித்தனி மதங்கள். சைவம் வேறு மதம் வைணவம் வேறு மதம்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!
சைவ மதம்ங்கிறது இந்து மதம் கிடையாது வைணவ மதம்ங்கிறது இந்து மதம் கிடையாது இதெல்லாம் வெள்ளைக்காரன் வந்த பிறகு 1800களின் தொடக்கத்தில் 19ஆம் நூற்றாண்டில்தான் இப்ப நாம் இருக்கிறது 21ஆம் நூற்றாண்டு 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மாற்றம்தான் இந்து ரிலிஜியன் என்கிற ஒரு மதம் தோன்றவே இல்லை. இதை உருவாக்கியவர் யார் என்று சொல்ல முடியாது. இஸ்லாத்தை உருவாக்கியவர் நபிகள் நாயகம், கிறிஸ்தவத்தை உருவாக்கியவர் இயேசுபெருமான் பௌத்தத்தை உருவாக்கியவர் கௌதம புத்தர், சமனத்தை உருவாக்கியவர் மகாவீரர், இந்து மதத்தை உருவாக்கியவர் யாருனே தெரியாது?. கேட்டா என்ன சொல்லவாங்க, இது 50 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால உருவானது. அதனால இது யார் உருவாக்கினா தெரியாது? எனக்கூறுவார்கள் என இந்து மதத்தினர் மனம் புண்படும் படி சகட்டுமேனிக்கு கருத்துக்களை அள்ளி வீசியிருக்கிறார்.
இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!