தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்க உள்ள நிலையில், இந்த வரலாற்றுத் தருணத்தைச் சென்னை மக்கள் அனைவரும் காணும் வகையில் மாநகராட்சி சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவை, சென்னையின் முக்கிய 20 இடங்களில் எல்.இ.டி (LED) திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் தவெக தொண்டர்கள் இணைந்து அமைத்துள்ள இந்தத் திரைகள் மூலம் பொதுமக்களும், ரசிகர்களும் விழாக்கோலத்தைக் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை: சென்னையின் அடையாளமான மெரினாவில் மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெசன்ட் நகர் கடற்கரை: தெற்குச் சென்னை மக்களுக்காக எலியட்ஸ் கடற்கரையில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையம்: வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் காணும் வகையில் இங்குச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்! நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!
சென்ட்ரல் ரயில் நிலையம்: பயணிகள் அதிகம் கூடும் இடமான சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திலும் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மற்ற இடங்கள்: தி.நகர் பேருந்து நிலையம், பாரிமுனை, கிண்டி மற்றும் மாநகராட்சியின் முக்கியப் பூங்காக்கள் உள்ளிட்ட மொத்தம் 20 இடங்களில் இந்த நேரலை ஒளிபரப்பு நடைபெறுகிறது.
காலை 10:00 மணிக்குத் தொடங்கும் பதவியேற்பு விழாவைக் காணத் தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் சென்னைக்கு வந்துள்ளனர். நேரு விளையாட்டரங்கில் இருக்கைகள் நிரம்பி வழியும் என்பதால், அரங்கிற்கு வெளியே திரளும் தொண்டர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க இந்த எல்.இ.டி திரைகள் பெரிதும் உதவும்.
ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த விழாவை, லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மெய்நிகர் வாயிலாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். சென்னை மாநகரம் முழுவதும் 'விஜய்' நாமமும், தவெக கொடிகளும் அலங்கரிக்கப்பட்டு, ஒரு திருவிழாக் கோலமாகத் காட்சியளிக்கிறது
இதையும் படிங்க: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்! ஆளுநருக்கு அவசர கடிதம்!