நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மகளிர் இடஒதுக்கீடு (131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காததால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
மக்களவையில் இன்று மாலை நடைபெற்ற 'டிவிஷன்' (Division) முறை வாக்கெடுப்பில் மசோதாக்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பதிவான 489 வாக்குகளில் 278 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 211 பேர் எதிராகவும் வாக்கு. மசோதா வெற்றி பெற 3ல் 2 பங்கு 326 வாக்குகள் தேவை.அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 326 வாக்குகள் தேவை. ஆனால், அரசுத் தரப்பிற்கு 48 வாக்குகள் குறைவாகக் கிடைத்ததால் மசோதா தோல்வியைத் தழுவியது.

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் எனத் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த வாதத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கருப்புக்கொடி போராட்டத்தின் எதிரொலியாக, 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் மாநிலங்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் தொகுதி மறுவரையறையை இணைத்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் முழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!
இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை திமுக எம்.பி. வில்சன் அறிமுகப்படுத்தியுள்ளார். மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே மசோதாவை மக்களவையின் தற்போது 543 இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் வழங்கப்படும். அடுத்த தேர்தல் முதலே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும்..! பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை..!!