வயதான காலத்தில் மாமனாரை (ராமதாஸ்) பார்க்காதவர், எங்களை எப்படி பார்ப்பீர்கள் என கேட்டு சௌமியாவை திருப்பி அனுப்புங்கள் என தருமபுரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்பி ஆ.மணி பேச்சு.
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன் அறிமுக கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக காங்கிரஸ் விசிக தேமுதிக கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்பி ஆ.மணி கலந்து கொண்டு வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனை அறிமுகம் செய்து வைத்து, திமுக அரசின் சாதனைகள் தொடர முரசு சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!
இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய எம் பி ஆ.மணி, தமிழ்நாட்டில் எடப்பாடி வெற்றி பெற முடியாது. கனவு காண்கிறார். அவர் காணும் கனவு கானல் நீர் தான், அவருடன் கூட்டணி சேர்ந்து பாமகவை சார்ந்த சகோதரி சௌமியா இங்கே போட்டியிடுகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் பெற்ற பிள்ளைகள் வருவார்கள், கட்டிப்பிடிப்பார்கள், நலம் விசாரிப்பார்கள், நம்பி விடாதீர்கள்.
சௌமியா இங்கே வந்து வாக்கு கேட்டால், நீங்கள் நல்லவர்தான் போயிட்டு வாருங்கள் என்று சொல்லி விடுங்கள். நீங்கள் வயதான காலத்தில் உங்க மாமனாரையே(ராமதாஸ்) பார்க்காதவர், எங்களை எப்படி பார்க்க போகிறீர்கள். நீங்கள் திண்டிவனத்தில் இருந்து இங்கு வரவேண்டும் என்றால் சுமார் 4 மணி நேரம் ஆகும் நாங்கள் உங்களை எப்படி பார்க்க முடியும் என சொல்லி அனுப்பி விடுங்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!