• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெற்ற மகனே நெஞ்சில் குத்துகிறார்! தூக்க மாத்திரையிலும் உறக்கம் வரவில்லை! கண்கலங்கிய ராமதாஸ்! 

    “நான் ஊட்டி வளர்த்த பிள்ளையே இன்று என்னை முதுகிலும் நெஞ்சிலும் ஈட்டியால் குத்துகிறான்” எனப் பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்ணீர் கலங்கினார்.
    Author By Thenmozhi Kumar Mon, 29 Dec 2025 15:11:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dr-ramadoss-breaks-down-in-tears-accuses-anbumani-of-be

    “நான் ஊட்டி வளர்த்த பிள்ளையே இன்று என்னை முதுகிலும் நெஞ்சிலும் ஈட்டியால் குத்துகிறான்” எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விம்மி விம்மி அழுதது, அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    தனது மகன் அன்புமணி தனக்கு இழைத்து வரும் அவமானங்களையும், துரோகங்களையும் பட்டியலிட்ட ராமதாஸ், “பெற்ற தகப்பனைத் தலையணை வைத்துத் கொல்லச் சொல்லும் ஒரு மகனை நான் வளர்த்திருக்கிறேன்” எனத் தனது தாயின் நினைவுகளைப் பகிர்ந்து கண்ணீர் சிந்தினார். மேலும், சௌமியா அன்புமணி பாமக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தார்.

    சேலத்தில் இன்று நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் ராமதாஸ், இதுவரை கண்டிராத ஒரு உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். “ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு வரவேற்புக்காக இந்தக் கூட்டம் கூடினாலும், என் மனமோ பாரத்தினால் துடித்துக் கொண்டிருக்கிறது. நான் யாருக்காக வாழ்ந்தேனோ, யாருக்குப் பதவிகளைக் கொடுத்தேனோ, அந்தப் பிள்ளைகளே இன்று என்னை எதிரணியில் இருந்து தூற்றுகிறார்கள். என்னையும், கௌரவத் தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் மிக மோசமாகப் பேசி வருகிறார்கள்” எனத் தனது வேதனையைத் தொடங்கினார்.

    இதையும் படிங்க: "ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சிக்கு துரோகமா?" அன்புமணிக்கு எதிராக கொதித்தெழுந்த ஜி.கே.மணி!

    அன்புமணி

    தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு நாளும் எனக்குத் தூக்கம் வருவதில்லை. என் கனவில் வந்த என் தாய், ‘ஏனப்பா அழுகிறாய்?’ எனக் கேட்டாள். அதற்கு நான், ‘அம்மா, பெற்று வளர்த்த தகப்பனையே தலையணை வைத்துத் தள்ளிக் கொல்லச் சொல்லும் ஒரு மகனை நான் வளர்த்திருக்கிறேன்’ எனச் சொன்னேன். சென்னையில் தகப்பனை வெட்டிச் சாக்குப் பையில் போட்ட செய்திகளைப் படித்திருக்கிறோம்; ஆனால் என்னை அப்படிச் செய்யாமல், ஒவ்வொரு நாளும் அவமானங்களால் அன்புமணி சித்ரவதை செய்கிறார்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மக்கள் அனைவரும் ‘ஏன் அன்புமணி இப்படிச் செய்கிறார், இன்னும் சில காலம் பொறுக்கக் கூடாதா?’ எனக் கேட்பதாகவும், ஆனால் அவரை மாற்றத் தன்னிடம் வழியில்லை என்றும் அவர் நொந்து கொண்டார்.

    அன்புமணிக்குத் தொண்டர்கள் மத்தியில் 5 சதவீத ஆதரவு கூட இல்லை எனக் குறிப்பிட்ட ராமதாஸ், சௌமியா அன்புமணி பாமக கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “நான் சத்தியம் செய்த காரணத்தினால்தான் அன்புமணி அமைச்சரானார். ஆனால் இன்று அவரது செய்கைகளால் நான் தூக்க மாத்திரை சாப்பிட்டாலும் உறக்கம் வருவதில்லை. பாட்டாளி மக்களை நினைக்கும் போதுதான் எனக்கு உறக்கம் வருகிறது” எனக் கூறிய அவர், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற்றுத் தருவேன் என உறுதி அளித்தார். இறுதியில், “நான் அறிவிக்கப் போகும் கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணியாக இருக்கும்; மக்கள் என்னை என்றும் கைவிட மாட்டார்கள்” என உரையை முடித்தபோது, அவர் மார்பில் கை வைத்து அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது. ஜி.கே.மணி மற்றும் காந்திமதி ஆகியோர் அவரை ஆசுவாசப்படுத்தினர்.

    இதையும் படிங்க: "பாமக யாருக்கு சொந்தம்?" சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு தொடக்கம்! 'ஐயா தான் ஆணிவேர்' முழக்கத்தால் அதிரும் அரங்கம்!

    மேலும் படிங்க
    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    அரசியல்
    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில்  புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    அரசியல்
    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    தமிழ்நாடு
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    அரசியல்
    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில்  புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    அரசியல்
    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    தமிழ்நாடு
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share