• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மருமகளின் கள்ளக்காதலை கண்டித்த மாமனார்.. கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலன்.. மரணத்தில் விலகிய மர்மம்..!

    திருவெறும்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் பொன்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    Author By Pandian Sat, 15 Mar 2025 13:17:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    real-estate-tycoon-murdered

    திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 64). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள தெரிந்தவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு பொன்ராஜ் சென்றுள்ளார். ஆனால் பாதி வழியில் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் பொன்ராஜ் இருசக்கர வாகனத்துடன் உடலில் காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    5 arrest

    இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பொன்ராஜுக்கு ஏற்பட்ட காயங்களை பார்த்தபோது அது விபத்து போல் இல்லாமல் இருப்பதாகவும், வேறு யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாருக்கும் பொன்ராஜின் மகன் சுந்தர்ராஜுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது தந்தை இறப்பில் மர்மம் இருப்பதாக போலீசில் சுந்தர்ராஜ் தெரிவித்தார். இதையடுத்து பொன்ராஜன் உடல் மீட்கப்பட்ட இடத்திலும் , அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்தனர்.

    இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை.. தொழில் போட்டி காரணமா..? போலீசார் விசாரணை..!

    5 arrest

    அதில் சில இளைஞர்கள் அவ்வழியாக கடந்து செல்வது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகப்படும்படியான நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை என உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்ராஜின் மருமகளுடன் அரியமங்கலம் முத்துநகரை சேர்ந்த  நிஷாந்த் (வயது 27) என்பவனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அதனை பொன்ராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    5 arrest

    இதனால் பொன்ராஜை நிஷாந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். உடனே நிசாந்தையும் அவனது கூட்டாளிகளான திருநெடுங்களம் வடக்கு தெரு சேர்ந்த பாரதிராஜா (வயது 24), அரியமங்கலம் அம்மா குளத்தைச் சேர்ந்த  சந்தோஷ்குமார் (வயது 19) சிலரையும் பிடித்து விசாரணை செய்தனர். இதனிடையே திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக ஸ்ரீரங்கம் அடைய வளைஞ்சான் வீதியைச் சேர்ந்த  பிரசன்னா (வயது 20), ஸ்ரீரங்கம் வடக்கு வாசலை சேர்ந்த குணசேகர் (வயது 21) ஆகிய இரண்டு பேரும்  சரணடைந்தனர்.

    5 arrest

    இதனால் பொன்ராஜ் இறப்பு கொலை தான் என்பது உறுதியாகியது. மேலும் நிஷாந்திடம் எதற்காக பொன்ராஜை கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏன் தாக்கினீர்கள் என போலீசார் விசாரித்துள்ளனர். பொன்ராஜ் மருமகளுடன் தனக்கு இருந்த தொடர்பை தெரிந்து கொண்டு பொன்ராஜ், தன்னை கண்டித்ததோடு தன்னை பார்க்கும் போதெல்லாம்  திட்டி வந்ததாக நிஷாந்த் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பொன்ராஜை தாக்கி விட்டு சென்றதாகவும் இந்த நிலையில் தான் பொன்ராஜ் இறந்து விட்டார் எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

    5 arrest

    அதன் அடிப்படையில் நிஷாந்த், பாரதிராஜா, சந்தோஷ், பிரசன்னா, குணசேகர் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  ஏற்பட்ட முன்விரோதத்தால்  ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்பொழுது கொலை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி,  கொடுக்கல் வாங்கல் காரணமாகவோ நிசாந்தை கூலிப்படையாக ஏவி விட்டு கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஏமாற்றி நிலம் அபகரிப்பு...தாய் மாமனை வெட்டிக்கொன்ற மருமகன்

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share