• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ₹5832 கோடி தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    மணல் கொள்ளை தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
    Author By Kathir Tue, 18 Feb 2025 10:11:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rs-5832-crore-sand-theft-case-madras-hc-transfers-case

    சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்து அரசுக்கு ரூ.5832 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தென் தமிழகத்தில் கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்ட கடலோரப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தாது மணல் சட்டவிரோதமாக எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. பட்டியலினத்தவர் மீது குற்றச்சாட்டு.. சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்

    CBI

    இந்த வழக்கை கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், தாது மணல் எடுப்பதற்காக, வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ் வேல்டு கார்னெட் நிறுவனம் உட்பட 7 நிறுவனங்களுக்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 52 உரிமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரியில் 6 என மொத்தம் 64 உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    CBI

    தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5,832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில் 2018 முதல் 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

    CBI

    மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அணுசக்திக்கு தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதை பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை. மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கைகளையையும் மத்திய அரசு வகுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

    நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ், கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுமணல் எடுக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வு தீர்ப்பளித்தது.

    CBI

    தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிறகும் தாதுமணல் எடுக்கப்பட்டதாக அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாபியாக்கள் மீது அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கனிம வளத்துறை பொறுப்பேற்க வேண்டும்.

    அதிகாரிகள் இந்த முறைகேடு குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் பார்வையாளர்களாக இருந்துள்ளனர். இது அரசின் செயல்பாடுகள் மீது மக்களுக்க உள்ள நம்பிக்கையை சீர்குலைத்துவிடும்.

    CBI

    சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடந்திருக்காது. இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் மீது மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கலெக்டர்கள் மீது வழக்கு பதிவு ெசய்யப்பட வேண்டும்.
    சட்டவிரோதமாக தாது மணல் இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அரசால் விதிக்கப்பட்ட அபராதம் அது தொடர்பான உத்தரவு செல்லும்.
    தாதுமணல் தொடர்பாக ககன் தீப் சிங் போடி, சத்தியபிரதா சாஹு, நீதிமன்றம் நியமித்த அதிகாரி சுரேஷ் ஆகியோரின் அறிக்கைகள் செல்லும்.

    சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    தாது மணல் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான மதிப்பில் எடுத்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இந்த முறைகேட்டில் அதிகாரிகள் சம்மந்தப்பட்டு அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுதியுள்ளது தெரியவந்துள்ளது. தாது மணல் கொள்ளை மூலம் மாநில அரசுக்கு ரூ.5,832 கோடியே 44 லட்சத்து 23,835 இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பை குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

    CBI

    சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டு கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள்வரை உடந்ைதயாக இருந்துள்ளனர். இந்த முறைகேட்டில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணை ஒதுக்கிவைத்துவிட முடியாது.

    நிறுவனங்களுக்கு குறைவான ராய்ல்டி தொகை நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும். சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

    ராயல்டி தொகை தொடர்பான முறைகேட்டில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசில் தலையீடு இருக்கும் என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்கிறோம்.

    CBI

    மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரி துறை, சுங்கத்துறை, வணிகவரித்துறை ஆகிய துறைககள் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது மத்திய, மாநில அரசுகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிபிஐயிடம் மாநில போலீசார் நான்கு வாரங்களில் வழக்கின் ஆவணங்களை வழங்க வேண்டும். சிபிஐ இயக்குநர் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ இயக்குநர் விசாரணையை கண்காணிக்க வேண்டும்.
    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெண் டாக்டர் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி, சிபிஐ மேல்முறையீடு; மாநில அரசு மனுவுடன், 27ஆம் தேதி விசாரணை

    மேலும் படிங்க
    நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!

    நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!

    தமிழ்நாடு
    அற்புதமான நடிப்பால் மனதை கவர்ந்தவர்... கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

    அற்புதமான நடிப்பால் மனதை கவர்ந்தவர்... கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

    இந்தியா
    இபிஎஸ் சொல்வது தான் எங்களுக்கு வேத வாக்கு.. அடித்துக்கூறிய செல்லூர் ராஜு..!

    இபிஎஸ் சொல்வது தான் எங்களுக்கு வேத வாக்கு.. அடித்துக்கூறிய செல்லூர் ராஜு..!

    அரசியல்
    உயிரை மாய்த்துக் கொண்ட புதுச்சேரி உலக அழகி! கருப்பு அழகி வாழ்க்கை கசந்தது எப்படி?

    உயிரை மாய்த்துக் கொண்ட புதுச்சேரி உலக அழகி! கருப்பு அழகி வாழ்க்கை கசந்தது எப்படி?

    இந்தியா
    பெண் காவலரை கொடூரமாக தாக்கிய கைதி! இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நடவடிக்கை..!

    பெண் காவலரை கொடூரமாக தாக்கிய கைதி! இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா எம்.பியாக 4 பேர் நியமனம்.. பாஜக அரசு கொடுத்த கவுரவம்.. நீளும் சாதனை பட்டியல்..!

    ராஜ்யசபா எம்.பியாக 4 பேர் நியமனம்.. பாஜக அரசு கொடுத்த கவுரவம்.. நீளும் சாதனை பட்டியல்..!

    இந்தியா

    செய்திகள்

    நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!

    நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!

    தமிழ்நாடு
    அற்புதமான நடிப்பால் மனதை கவர்ந்தவர்... கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

    அற்புதமான நடிப்பால் மனதை கவர்ந்தவர்... கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

    இந்தியா
    இபிஎஸ் சொல்வது தான் எங்களுக்கு வேத வாக்கு.. அடித்துக்கூறிய செல்லூர் ராஜு..!

    இபிஎஸ் சொல்வது தான் எங்களுக்கு வேத வாக்கு.. அடித்துக்கூறிய செல்லூர் ராஜு..!

    அரசியல்
    உயிரை மாய்த்துக் கொண்ட புதுச்சேரி உலக அழகி! கருப்பு அழகி வாழ்க்கை கசந்தது எப்படி?

    உயிரை மாய்த்துக் கொண்ட புதுச்சேரி உலக அழகி! கருப்பு அழகி வாழ்க்கை கசந்தது எப்படி?

    இந்தியா
    பெண் காவலரை கொடூரமாக தாக்கிய கைதி! இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நடவடிக்கை..!

    பெண் காவலரை கொடூரமாக தாக்கிய கைதி! இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா எம்.பியாக 4 பேர் நியமனம்.. பாஜக அரசு கொடுத்த கவுரவம்.. நீளும் சாதனை பட்டியல்..!

    ராஜ்யசபா எம்.பியாக 4 பேர் நியமனம்.. பாஜக அரசு கொடுத்த கவுரவம்.. நீளும் சாதனை பட்டியல்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share