• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: நாளை தொடங்குகிறது யாக சாலை பூஜை..! பக்தர்களுக்காக இவ்ளோ ஏற்பாடா!!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா யாக சாலை பூஜையுடன் நாளை தொடங்க உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    Author By Editor Mon, 30 Jun 2025 17:21:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruchendur-murugan-temple-kumbabishekam-yaga-saalai-pooja-tomorrow

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    kumbabishegam

    சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.

    இதையும் படிங்க: களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.  

    மேலும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

    கடந்த 27ம் தேதி காலையில் கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வல்லப விநாயகர் சன்னதி முன்பு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் யாகவேள்வி, பிரம்மச்சாரி வழிபாடு, கஜபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. மாலையில், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேள்வி பூஜை நடந்தது.

    kumbabishegam

    ஜூலை 1ம் தேதியான நாளை யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 8000 சதுரஅடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. யாக சாலை பூஜை நாளை தொடங்கி வரும் 7ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், நாள்தோறும் வடை, பாயாசத்துடன் அறுசுவை அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு தினத்தன்று 20 இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 

    15 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் மீது டிரோன் மூலம், 20 இடங்களில் புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் திருச்செந்தூரில் ஏற்கனவே 455 பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், கூடுதலாக 400 பேருந்துகளை சுழற்சி முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 30 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள், 18 தற்காலிக வாகன நிறுத்துமிடம் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    kumbabishegam

    314 கழிவறை வசதிகளுடன் கூடுதலாக 510 தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 907 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்புப் பணியில் 6000-த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட உள்ளனர். 

    கடலில் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடலோர பாதுகாப்பு பயிற்சி பெற்ற வீரர்கள், அந்தப் பகுதியில் நிறுத்தப்படுகின்றனர். 160 சிசிடிவி கேமராக்கள் மூலம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.

    ஜூலை 7-ந் தேதி அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதன்பின்னர், காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, ஜெயந்திநாதர், நடராஜர், குமரவடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    kumbabishegam

    தொடர்ந்து அன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்கச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    இதையும் படிங்க: குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    மேலும் படிங்க
    மறக்காம குடை எடுத்துக்கோங்க மக்களே... காலையிலேயே 19 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் கனமழை...!

    மறக்காம குடை எடுத்துக்கோங்க மக்களே... காலையிலேயே 19 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் கனமழை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (08-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (08-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    அரசியல்
    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    அரசியல்

    செய்திகள்

    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    அரசியல்
    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அரசியல்
    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share