பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக்கூறி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்ப்வங்கள் அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வந்தார். அவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர்செக்கடியை சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பனுக்கும்(28) இடையே சமூக வலைதளம் (இன்ஸ்டா) மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது
அதைத்தொடர்ந்து 6 மாதங்களாக நாள்தோறும் சிறுமியிடம் சமூக வலைதளத்தில் பழகி வந்துள்ள மீன்பிடி கூலித்தொழிலாளி கருப்பன், கடந்த 8-ந் தேதி பள்ளிக்கு வந்த சிறுமியை திருவண்ணாமலை சாத்தனூர் அணையை சுற்றுக்காட்டுவதாக கூறி 2 சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் அதிபயங்கரம்... மது ஊற்றிக் கொடுத்து 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...!
பின்னர் அங்கு சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அன்று மாலை காலதாமதமாக வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்ததை கூறியதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பிறகு போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், மீன்பிடி கூலித் தொழிலாளி கருப்பனை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் உச்சக்கட்ட கொடூரம்... மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை நாசம் செய்த வட மாநிலத்தவர்கள்...!