• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2025 ஏப்ரல் வரை.. 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது.. டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்..!

    2025 ஏப்ரல் வரை சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிரான 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
    Author By Editor Wed, 04 Jun 2025 16:10:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    29-cases-against-rowdies-till-april-2025-dgp-shankar-jiwal

    தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

    29 cases

    குற்றவாளி கூறுகளுக்கு எதிரான தண்டணைகள்:

    தமிழ்நாடு காவல்துறை சார்பில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் பிரத்யேக மண்டல அளவிலான சரித்திர பதிவேடு ரவுடிகள் கண்காணிப்பு குழுக்கள், வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களிலும், மாநகர ஆணையரகங்களிலும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்றன. மாநகரங்களில் துணை காவல் ஆணையர்கள் (தலைமையகம்) மற்றும் மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (தலைமையகம்) ஆகியோர் சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் நீதிமன்ற முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, விசாரணையை விரைவுப்படுத்தி தண்டனை பெற நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: 2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

    29 cases

    சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு அதிகபட்ச தண்டணை: 

    விசாரணையின் முடிவுறும் தருவாயில் உள்ள நிலுவை வழக்குகள் மற்றும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. 2025-ம் ஆண்டில், இதுபோன்று 376 வழக்குகள் அவற்றின் விசாரணையை கூர்ந்து கண்காணிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

    2024-ம் ஆண்டில், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டணை வழங்கப்பட்டு 150 சரித்திர பதிவேடு ரவுடிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த 12 ஆண்டுகளைவிட மிக அதிக அளவாகும். இதுவரை (ஏப்ரல், 2025 வரை) சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிரான 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. மேற்கு மண்டலத்தில் திருப்பூர், தர்மபுரி, கோயம்புத்தூர் & கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் நகரம் ஆகியவற்றில் 5 வழக்குகள்; மத்திய மண்டலத்தில் பெரம்பலூர், மயிலாடுதுறை (3), திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் ஆகியவற்றில் 6 வழக்குகள்; தென் மண்டலத்தில் திருநெல்வேலி (5), தென்காசி, விருதுநகர் (3), தூத்துக்குடி (2), திண்டுக்கல் (2), ராமநாதபுரம் (3) & கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மதுரை நகரம் ஆகியவற்றில் 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

    29 cases

    தென் மண்டலத்தில் சரித்திர பதிவேடு ரவுடி கொலைகளில் பொது விமர்சனங்களை ஏற்படுத்தும் வழக்குகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. இத்தகையை கொலை வழக்குகளை முறையாக கண்காணித்ததன் விளைவாக, 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

    நீதிமன்ற வழக்கு விசாரணையை கண்காணித்தல் மற்றும் தண்டனை பெறுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், கொலைகள், குறிப்பாக சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழி கொலைகள் குறைவதற்கு முக்கிய பங்களித்துள்ளது. சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பழிக்குப் பழி மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகள் கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் போன்ற பிற வழக்குகளிலும் இதேபோன்ற நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

    தண்டணை வழங்கப்பட்ட முக்கிய வழக்குகள்: 

    மதுரை: 

    மதுரை மாநகரில் 8.7.2021 அன்று B4 கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பவ இடத்தில் 28 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக முருகன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கானது சொத்துக்களுடன் சேர்த்து 28 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், ஒரு கார் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 31.12.21 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலை வழக்கு உட்பட 29 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மற்றும் மதுரை மாநகர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரித்திரபதிவேடு அவருக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை திறம்பட கண்காணித்ததன் காரணமாக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    29 cases

    மதுரை மாநகர், திருநகர் காவல் நிலையத்தில் 12.10.2016 அன்று முன்விரோத வழக்கான பஷீத் அகமது (வயது 30) என்பவரது கொலை வழக்கு குற்றச்சாட்டில் தொடர்புடைய ராஜேஷ்(30) மற்றும் திரு. விஷ்வா(18) என்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

    திருநெல்வேலி: 

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்கன் மகன் பெருமாள் என்பவர், ராஜன் மகன் செல்வராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதில் வைகுண்டம் என்பவர் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜுக்கு எதிராக சாட்சியம் அளித்தார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்ற எட்டு குற்றவாளிகளுடன் சேர்ந்து வைகுண்டத்தைக் கொலை செய்தனர். இவ்வழக்கில் நீதிபதி 6.3.2025 அன்று செல்வராஜுக்கு மரண தண்டனையும், 4 கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார். மீதமுள்ள 3 குற்றவாளிகளுக்கு 2 மாத சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் காவல் நிலைய எல்லையில் சுப்பையா(38) மற்றும் 20 பேர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக ரத்தினவேல் பாண்டியன் என்பவரை கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக அந்த காவல் நிலைய எல்லையில் பதிவான 5 கொலை வழக்குகளிலும், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    29 cases

    திண்டுக்கல்: 

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு ரவுடிகள் ராஜா, பிரகாஷ், சரத்குமார் ஆகிய 3 பேர் 2021-ம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கொலை செய்தனர். இவ்வழக்கில் 5.4.2025 அன்று ராஜா மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிரகாஷ் என்பவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி: கடந்த 2022-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் காவல் நிலைய எல்லையில், முன்பகை காரணமாக காளிபாண்டி என்பவர் மாரியப்பன் என்பவரை கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் 16.4.2025 அன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா? உடனே மாநில பாடத்திட்டத்தை மாற்றுங்கள்...அன்புமணி வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழ்நாடு
    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய  திவ்யா சத்யராஜ்!!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய திவ்யா சத்யராஜ்!!

    அரசியல்
    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா

    செய்திகள்

    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழ்நாடு
    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய  திவ்யா சத்யராஜ்!!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய திவ்யா சத்யராஜ்!!

    அரசியல்
    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share