சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அம்பத்தூர் போரூர் சாலையில் இந்த சோதனையானது நடைபெற்றபோது. தனியார் ஏஜென்சி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக பணம் இருப்பது தெரிய வந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததன் காரணமாக அந்த பணம் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரவாயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 5 கோடிக்கு மேல் இந்த பணம் இருக்கும் என கூறப்படுகிறது. அதில் இருக்கக்கூடிய பணம் மொத்தமாக டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்யப்பட்ட பணம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அதற்கான ஆவணங்கள் இல்லாததன் காரணமாக தற்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.தற்போது அதனை எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அந்த பணத்திற்கான ஆவணத்தை டாஸ்மார்க் அதிகாரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
உரிய ஆவணங்களை சரிபார்க்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது பணத்திற்கான உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டால் அந்த பணத்தை டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படும் இல்லை, என்றால் அந்த பணம் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் வைக்கப்படும். தொடர்ந்து இந்த பணம் உண்மையாகவே டாஸ்மார்க் அலுவலத்திலிருந்து கொண்டுவரப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டதா என்று தோரணங்களில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. அதேபோன்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த பணம் குறித்து விசாரணையானது தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரே இடத்தில் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள்..!! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!
இதையும் படிங்க: மேற்காசிய போர்! முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ வேண்டும்!! கோரிக்கை விடுத்த ஈரான்!