தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக திகழும் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டி 1950ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி லெ மான்ஸ் கப் - சில்வர்ஸ்டோன் ரவுண்ட் போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் எனத் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திரைத்துறை நட்சத்திரரும் மோட்டார் விளையாட்டு வீரருமான அஜித் குமார் சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றோம். மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது ஆழ்ந்த ஆர்வமும், தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டங்களும் நம்மை மிகவும் கவர்ந்தன. மோட்டார் விளையாட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அதன் பிரமாண்டத்தையும் அவர் பொறுமையாகவும் அர்ப்பணிப்புடனும் விளக்கினார்.

முன்னாள் இந்திய ஃபார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன் உடனிருந்தார். தொடர்ந்து உலகின் முன்னணி தொழில், வணிக மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜே. மேகநாத ரெட்டியும் இப்பயணத்தில் இணைந்தார்.நம் தமிழ்நாட்டில் உலகத்தரமான உள்கட்டமைப்பை அடித்தளமாகக் கொண்டு சர்வதேசத் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடாகும். இதன்பொருட்டு தமிழ்நாட்டில் உலகத்தரமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் அமையப்பெற உள்ளது. முதல்வர் விஜயுடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்மையாகக் கொண்டு இந்தியா முழுவதற்கும் சர்வதேச அளவிலான ஸ்போர்ட்ஸ் எகானமியை உருவாக்குவதற்கான பல புதிய தேடல்கள், கற்றல்கள் மற்றும் புதிய பார்வைகளைப் பெற்றுக்கொண்டோம் என்றார்.
இதையும் படிங்க: பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
முதல்வர் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். தமிழ்நாடு விளையாட்டு கட்டமைப்பிலும் விளையாட்டுப் பொருளாதாரத்திலும் தலைசிறந்து விளங்கி இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும். மேலும் தமிழக விளையாட்டுத்துறையை நவீனமயமாகவும் உலக நாடுகளுக்கு இணையாகவும் உருவாக்க வேண்டிய பல்வேறு புதிய செயல்திட்டங்களை இப்பயணத்துடன் மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இதையும் படிங்க: நானும் ரேசர் தான்!! ரேசிங் சூட்டில் முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோனில் செம சர்ப்ரைஸ்! வைரலாகும் போட்டோக்கள்!