அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் யார் யாருக்கு போதைப்பொருட்களை வினியோகம் செய்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பபோதைப்பொருள் வாங்கியது, பிரசாத்திடம் செல்போனில் பேசியது, பணம் அனுப்பியது உள்ளிட்ட விவரங்கள் செல்போன் மூலம் அம்பலமானது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு: அதிமுக Ex. நிர்வாகியின் அதிர வைக்கும் பின்னணி…

விசாரணைக்குப் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் பிரசாத் தொடர்பாக முக்கிய வாக்குமூலங்களை நடிகர் ஸ்ரீகாந்த் அளித்தார்.

இதற்கிடையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை போலீசார் வெளியிட்டனர். பிரசாத் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். பிறரின் செல்போன் அழைப்பு தரவுகள், லொகேஷன்கள் ஆகியவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும், மூன்று ஆண்டுகளாக போதை பொருள் சப்ளை செய்து வந்ததும் போலீசார் அறிக்கையில் தெரிய வந்தது.

மேலும் பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் வெளிநாடுகளில் உள்ளவர்களின் நிலங்களை போல ஆவணங்கள் மூலம் மிரட்டி அபகரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த போதைப் பொருள் வழக்கில், மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாகவும் வழக்கில் தலைமுறைவாக உள்ள மேலும் சில கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ஶ்ரீகிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் கிருஷ்ணா தலைமுறைவாகி இருந்தார். இதனிடையே, நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் படப்பிடிப்பு முடிந்த சென்னை திரும்பிய கிருஷ்ணா தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது பிடிபட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொக்கைன் வாங்கியதன் பின்னணி..! நடிகர் ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்.. அவிழும் முடிச்சுகள்..!