பாஜகவின் மத்திய அரசின் கொள்கைகளுக்கு அதிமுக மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள், விமர்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், அதிமுக தலைமை உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. கீழடி அறிக்கை வெளியீடு தொடர்பான சர்ச்சையில் அதிமுகவின் மவுனம் பாஜகவின் தமிழர் வரலாற்றை மறைக்கும் முயற்சிக்கு உடந்தையாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

தற்போது, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் குறித்து விமர்சனங்கள் அடங்கிய வீடியோவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது பாஜகவின் சித்தாந்தங்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை விட்டு விலகுவதாகவும் விமர்சிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அதிமுகவை அமித் ஷா கழகம் அல்லது அடிமை கழகம் என்று பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் அண்ணாவுக்கு அவமானம்... பாஜகவுக்கு அதிமுக அடிமையானதாக அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!

முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சம்பவங்கள் அனைத்துமே தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்துக்கும், ஒற்றுமைக்கும் எதிரானது. இவற்றையெல்லாம் விமர்சனம் செய்யாமல் அங்கேயே அமர்ந்து கண்டு களித்துள்ளனர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்றும் பா.ஜ.க.வின் அடிமையாக, கொத்தடிமையாக திகழும் பழனிசாமியின் அதிமுக கட்சிப்பெயரை அடிமைகள் கழகம் எனவோ, அமித்ஷா கழகம் எனவோ பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் விமர்சித்து உள்ளது.

அந்த அளவுக்கு முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கிகளாக மாறிப்போயிருக்கிறார்கள் அதிமுகவினர் என்றும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறி கொடுத்து அடிமை சேவகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அதிமுகவினரையும் சரி, முருகன் பெயரில் அரசியல் கலவரம் நடத்த துடிக்கும் பா.ஜ.க.வினரையும் சரி தமிழ்நாட்டு மக்கள் எந்நாளும் புறக்கணிப்பார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!