முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் இத்திட்டத்தின் மூலம், மக்களின் கோரிக்கைகளையும் புகார்களையும் நேரடியாகப் பெற்று, அவற்றை விரைவாகவும் வெளிப்படையாகவும் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது. இவை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன, இதில் 13 அரசு துறைகள் மூலம் 43 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வந்தவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடபதி என்ற முதியவர் மனு கொடுத்துவிட்டு ரசீது கேட்டுள்ளார். அவரை வருவாய் அலுவலர் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. மேலும் முதியவர் பிரச்சனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ. முதியவரிடம் வாக்குவாதம் செய்து அவரை நெஞ்சில் குத்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில், அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: செல்போன்ல கூட பேச முடியாதாம்! அதிமுக நிர்வாகிகளின் அழைப்பை ஏற்க மறுக்கும் செங்கோட்டையன்…
மனு அளிக்க வந்த முதியவரை திமுக அரசின் காவல்துறையின் நெஞ்சில் குத்தி உள்ளதாகவும் இதுதான் உங்களுடன் ஸ்டாலினா என்றும் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்பது மக்கள் மனோ தீர்க்கும் முகமா அல்லது மனு கொடுக்க வர மக்களை முடக்கும் முகாமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த பாசிச ஆட்சி வீழும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அதனை உறுதி செய்யும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே எடப்பாடி... அதிமுகவில் உதயமாகிறது 5வது அணி... அப்செட் மாஜி அதிரடி முடிவு...!