ஈரோடு மாவட்டத்தில் உள்ள காஞ்சிகோயில் பகுதியில் சாலையோரத்தில் சிறு உணவகம் ஒன்று நீண்ட காலமாக இயங்கி வந்தது. இரவு நேரத்தில் பசியுடன் வரும் பயணிகள், உள்ளூர் தொழிலாளர்கள், குறிப்பாக வட மாநிலங்களிலிருந்து வந்து பணி செய்யும் மக்கள் அங்கு வந்து சாப்பிடுவது வழக்கம். இரவு பத்து மணிக்கு மேல் கடை திறந்திருந்ததால், அங்கு வந்த ஒரு காவலர் கடையை மூடச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
விதிமுறைகளின்படி இரவு நேரத்தில் உணவகங்கள் செயல்படக் கூடாது என்ற காரணத்தைச் சொன்னதாக தெரிகிறது. பேசிக் கொண்டிருந்த காவலர் திடீரென பொருட்களை அடிக்க தொடங்கினார். தொடர்ந்து, அந்தக் காவலர் லத்தியை எடுத்து, மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், தட்டுகள், ஸ்டவ் போன்ற பொருட்களை அடித்து கீழே தள்ளினார். பொருட்கள் சிதறி விழுந்தன. சத்தம் கேட்டு பயந்து போன வாடிக்கையாளர்கள் சிலர் அங்கிருந்து வெளியேறினர்.

காவலர் லத்தியால் பொருட்களை அடித்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கடுமையாக சாடியுள்ளது. பொருட்களை தாக்கியது மட்டுமல்லாமல் தலைமை காவலர் மோகன் குமார் என்பவர் வடமாநில தொழிலாளியையும் தாக்கி இருந்தார்.
இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!
ஈரோடு மாவட்டம் காஞ்சிக் கோவிலில் ஹோட்டலில் உள்ள பொருட்களை லத்தியால் தாக்கி வீசிய காவலர் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்குவேன் என்று வாய்கிழிய வசனம் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலினை சாடியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவலரே செய்யும் இத்தகைய அராஜகங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!