தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. தமிழக அரசியலில் புதிய அலை என்று விஜயை ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில் விஜயால் எந்த விதமான தாக்கமும் ஏற்படாது என்று சிலர் கூறி வருகின்றனர்.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தமிழக வெற்றி கழகத்தை ஒருங்கிணைக்கும் பதவி உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டன. விஜயை நிச்சயம் முதலமைச்சராக்குவேன் என்று செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறி வருகிறார். செங்கோட்டையனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.

விஜயை எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்க போகிறார் செங்கோட்டையன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வராக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார். எல்லோரும் தன்னை எம்ஜிஆர் என்று கூறலாம் என்றும் ஆனால் மக்கள் இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். அவர்கள் செல்லாக் காசு என்று ஏற்கனவே கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார். தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகம் என்ன ஆகப்போகிறது என்பது இப்போதே தெரிகிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..! அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!
இவர் என்ன தூய்மையின் பிறப்பிடமா என்று கேட்டார். தங்களுடன் இருந்த செங்கோட்டையனை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறிய செல்லூர் ராஜு, தமிழக வெற்றி கழகத்திலேயே செங்கோட்டையனை மதிப்பதில்லை என்று தெரிவித்தார். இப்படி எல்லாம் பேசினால் செங்கோட்டையனை ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்ட செல்லூர் ராஜு, விடுங்கப்பா என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அறைக்குள் அமர்ந்து அரசியல்..! என்னத்த சொல்ல? விஜயை விளாசிய செல்லூர் ராஜூ..!