தவெகவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான், எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிச்சாமியிலான கூட்டணியும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்.தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும்
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, தனித்து நின்று 25 ஆயிரம் வாக்குகள் வாங்கியவர்களுக்கெல்லாம் அதிமுக பதில் சொல்ல முடியாது, அதிமுக தனித்து நின்றாலும் சிங்கம் சிங்கம்தான். காங்கிரஸ் கட்சிக்கு என்ன இருக்கிறது? சும்மா வந்து வேடிக்கை காட்டிக்கொண்டு வேடிக்கை பொருளாகவே உள்ளார்கள்.
திமுக அரசிற்கு உயர் நீதிமன்றம் மிகப்பெரிய குட்டு வைத்துள்ளது. அமைச்சர் கே.என்.நேரும் மீது அமலாக்கத்துறை பலமுறை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் கையிலெடுத்து வழக்கு பதிவு செய்ய சொல்லியும் தமிழக அரசு இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது வெட்கக்கேடான விஷயம். நிரபராதி என உச்சநீதிமன்றம் செல்வோம் என சொல்லக்கூடியவர்கள் வழக்குப் பதிய மறுக்கிறார்கள்.சம்பந்தமில்லாததற்கெல்லாம் தேடி தேடி வழக்கு போட்டவர்கள். உயர் நீதிமன்றம் சொல்லியும், உயர்ந்த ஸ்தாபனமான அமலாக்கத்துறை சொல்லியும் வழக்குப் பதிய மறுக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஜெயிச்சே தீரணும்... களமாடும் தவெக..! தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவு..!!
திமுகவினரும், திமுக அமைச்சர்கள், எதை செய்தாலும் அதை தட்டிக்கேட்காமல் தட்டிக்கொடுக்கும் கட்சியாக திமுக தலைமை உள்ளது. திமுகவின் பல அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது.தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருள்ராஜ் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு பெரிய கட்சியெல்லாம் இல்லை . அவன் (அருண்ராஜ்) கிடக்கிறான் லூசு பய, திமுகவுக்கும், தவெகவிற்கு போட்டி என தவெகாவினர் லூசுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என கடுமையாக சாடினார்.
பெரிய கட்சியை எதிர்த்து போராடுவது போல் காட்டிக்கொண்டால் தவெகவை மக்கள் மதித்துவிடுவார்களா? தவெகவில் யார் இருக்கா அங்கு, ஒரு நாள் கூத்திற்கு தாங்குமா தவெக. ஒரே நாளில் இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுவார்கள். அதிமுக எவ்வளவு பெரிய பலம் கொண்ட கட்சி. எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கி எடப்பாடி பழனிச்சாமி கையில் அற்புதமாக இருக்கும் கட்சி அதிமுக . எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களில் இருக்கக்கூடிய அத்தனை அத்தனை பேரும் வீர வால்கள், போர் வால்கள். அதிமுகவை எதிர்க்கின்ற துணிச்சல் திமுகவிற்கு மட்டுமே உள்ளது, வேறு கட்சிக்கு கிடையாது. தவெக களத்திலேயே கிடையாது எனக்கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பி.எஸ்..! ஒரே வரியில் பதிலடி கொடுத்த நயினார் ..!
இதையும் படிங்க: சின்ன தப்பு கூட நடக்க கூடாது!! விஜய் போட்ட பக்கா ப்ளான்!! தவெகவில் களமிறங்கும் முன்னாள் அதிகாரிகள்!!