புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இரட்டை வாக்குப் பதிவு நீக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் இதற்கெல்லாம் சீர்திருத்தம் செய்ய வேண்டும், தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்த பணி யை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சீர்திருத்தப் பணியை வெளிப்படையாக நேர்மையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
எத்தனை முனைப் போட்டி வந்தாலும் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 2026 தேர்தலில் ஆளும் கட்சியாக அமையும்.
அதிமுகவில் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு, அதிமுக ஜனநாயக கட்சி, மக்கள் விரும்புகின்ற கட்சி, மக்களை விரும்புகின்ற கட்சி அதிமுக, எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடியாருக்கு பிறகு இன்னொரு யாரோ வருவார் என எடப்பாடியார் சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: கார் குண்டு வெடித்த இடத்துக்கு 20 நிமிடத்தில் அமித் ஷா சென்றது எப்படி? - பதில் சொல்லுங்க எடப்பாடி ... பகீர் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி...!
ஆலமரமாக இருக்கக்கூடிய அதிமுகவில் பல நேரத்தில் பல குருவிகள் வந்து, அடை காத்து குஞ்சு பொரித்து வெளியேறி இருக்கின்றன. அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை எனக் கூறினார்.
இதையும் படிங்க: பட்டாக்கத்தி TO வெடிகுண்டு... அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு... விளாசிய EPS...!