அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் குறித்து கேள்வி கேட்ட மகன்.. இதை அனுமதிக்க முடியாது! சசிதரூர் ரியாக்ஷன்..!

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அமெரிக்க அரசு, ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள். பின்னர் அங்கு தலிபான் ஆட்சி அமைந்ததையடுத்து, அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி, சிலர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த 12 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உத்தரவால், அமெரிக்காவுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் அமெரிக்காவை விட்டு ஆப்கானிஸ்தானுக்கே செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் அங்கு சென்றால் தலிபான்கள் நிச்சயமாக தங்களுக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே நாங்கள் எங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள, இந்த பயண தடை உத்தரவை நீக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் அதிபர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வச்சான் பாரு ஆப்பு.. வரிகளை டபுள் ஆக்கிய ட்ரம்ப்.. தீராத தலை வலியில் பிரதமர் மோடி..!