தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தங்களது கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியதாக அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பகிரங்கமாக அக்குவேறு ஆணிவேறாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவின் அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இபிஎஸ்-ஸின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கட்சியின் உட்கட்சிப் பூசல் மற்றும் மூத்த நிர்வாகிகள் நீக்கம் குறித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகம், நமது அதிமுக கட்சிக்குள் மிக மோசமான குதிரை பேர வியாபாரத்தை நடத்தியுள்ளது. நமது கட்சியின் ஒருசில நிர்வாகிகளுக்குப் பெரிய பதவி ஆசைகளைக் காட்டி, அவர்களை நம்மிடம் இருந்து பிரிக்க தவெக முற்பட்டது என்பது தான் மிகவும் வேதனையான உண்மை என்று மிக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக-வின் இந்தத் திரைமறைவு வேலைகளை முறியடிக்கவே கட்சியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கோட்டை வட்டார அரசியல் வல்லுநர்கள் இதன் மூலம் கணித்துள்ளனர்.

தவெக-வின் புதிய அரசு குறித்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்த அவர், தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு ஒரு பொய்க்கால் குதிரை ஆட்சியைத் தமிழ்நாட்டில் அமைத்துவிட்டது. தனிப் பெரும்பான்மை இல்லாமல், ஐந்து கட்சிகளின் ஆதரவோடு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் இன்னும் சில காலத்திற்கு மட்டும்தான் நீடிக்கும் என்று அனல் பறக்கத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அதிமுகவுக்குள் நிர்வாகிகளை இழுக்க தவெக குதிரை பேரம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் குற்றம் சாட்டியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!
இதையும் படிங்க: தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!