சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பரபரப்பான அரசியல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.
அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் புதிதாக இணைந்தவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விழா ஒரு பெரிய மாநாடு போன்று சிறப்பாக நடைபெற்றது.
இதன்பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் இந்த விழா ஒரு மாநாடு போல் உள்ளது. இளைஞர்களை கவரும் திறன் கொண்டவர்கள் ஆதவ் அர்ஜூனாவும், புச்சி ஆனந்தும்” என்று பாராட்டினார்.
இதையும் படிங்க: எண்ணிக்கை 7 ஆக உயர்வு... விடிந்ததுமே வெளியானது பரபர அறிவிப்பு... அதிமுகவுக்கு தவெக வைத்த அதிரடி செக்...!

மேலும், “முதலமைச்சர் விஜய் இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்” என்று உறுதியுடன் கூறினார். எதிர்க்கட்சியினர் துரோகிகள் என்று கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், “கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எங்கே துரோகம் நடந்தது? திமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்ததுதான் துரோகம். எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள்தான் துரோகிகள். துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர். நல்லவர்கள் அனைவரும் தவெகவில் இணைந்துவிட்டனர்” என்றார்.
திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகும் எண்ணத்தை இங்கு வந்தவர்கள் தகர்த்துவிட்டதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொள்ள அனுமதி அளித்தவர் முதலமைச்சர் விஜய் என்றும், அதிமுகவில் இருந்து தன்னை தூக்கி எறிந்தபோது தாங்கிப் பிடித்தவர் விஜய்தான் என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.
இந்த இணைப்பு விழா தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு நடக்கும் இந்த பாய்ச்சல் எதிர்கால அரசியல் சமன்பாடுகளை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!