சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நகை திருட்டு தொடர்பாக அஜித்குமார் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். முன்னதாக நகை திருட்டு தொடர்பாக கோவில் ஊழியர்களே தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை எடுத்து போலீசார் அழைத்துச் சென்று விசாரித்த போது கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து ஆறு காவலர்களை சஸ்பெண்ட் செய்தனர். இருப்பினும் அஜித்குமார் கொலையில் மர்ம முடிச்சுகள் இருப்பதாகவும் உரிய நேத்திக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அஜித் குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் அஜித்குமார் தாக்க பட்ட காவல் நிலையத்தை சுற்றி இருக்கும் வியாபாரிகள் மிகவும் வேதனையோடு தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மாலை 4 மணியளவில் அஜித்குமாரை டெம்போவில் அழைத்து வந்ததாகவும் அவரை ஒருவர் பிடித்துக் கொண்டு சென்றதாகவும், தாங்கி தாங்கி நடந்து சென்றதாகவும் கூறினர். அதுமட்டுமல்லாது அஜித் குமாரை அழைத்துச் சென்று ஒருவர் கூட சீருடை அணியவில்லை கால் சட்டை போன்ற உடையை தான் அணிந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: கஸ்டடி மரணம்... அஜித் குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆனால் திரும்பி வரும்போது அவர் நடந்து வரவில்லை, ஐந்து பேர் தூக்கி கொண்டு வந்து ஆட்டோவில் போட்டு எடுத்துச் சென்றனர் என வேதனையுடன் தெரிவித்தனர். அஜித் குமாரின் அலறல் சத்தம் பல மீட்டர் தூரத்திற்கு கேட்டதாகவும், மனம் பதறிப்போய் வியாபாரிகள் விசாரித்த போது அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ஐயோ...அம்மா... என்ற அலறல் சத்தம் மனதை உலுக்கியதாகவும், ஆனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

ஏற்கனவே நாடார் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் காவல்துறையினரால் உயிரிழந்ததாகவும் நாளை இது போல மீண்டும் ஒரு சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் என்றும் கேள்வி எழுப்பினர். ஒரு பேசிய ஒரு சிறுவன், தனது மாமா அடிக்க படுவதையும் கண்ணால் பார்த்ததாகவும் மிகவும் கொடூரமாக தாக்கியதாகவும், அவரது ஒரு ஒரு விரலாக உடைத்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தார். தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த அஜித்குமார் தண்ணீர் கேட்டபோது அவரை செருப்பால் அடித்ததாகவும் மிகுந்த வருத்தத்தோடு அந்த சிறுவன் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: கஸ்டடி மரணம்... அஜித் குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!