பாமக நிறுவனர் ராமதாஸ் - பாமக தலைவருமான அன்புமணி ஆகியோர் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் மோதல் தொடங்கியது. அந்த மோதல் தற்போது வரை தொடர்கிறது. இதனிடையே சென்னை தி. நகரில் நடைபெற்ற சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினோம். அப்போது வன்னியர்களுக்கு நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் முதலில் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் இருக்கும் பாமக எம்.எல்.ஏக்கள்... பெயர் குறிப்பிடாமல் அன்புமணி சொன்ன சொல்!!

ஆனால் கடைசியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய போது வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதில் பிரச்சனை இருக்கிறது என்றார். இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வன்னியர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!