மேகதாது விவகாரம் குறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ராகுல்காந்திக்கு சவால் விட்டு இருந்தார். மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவதற்கு தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது தேவையற்றது., கர்நாடக அரசின் சூழ்ச்சி வலையில் தமிழக முதலமைச்சர் விழுந்து விடக்கூடாது என்றும் அன்புமணி எச்சரித்துள்ளார். மேகதாதவில் அணை கட்டுவதை தமிழக அரசு ஏற்காத நிலையில் எதற்கு பேச்சுவார்த்தை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் வரும் ராகுல் காந்தி மேகதாது வேண்டாம் என்று பேசுவாரா என அன்புமணி கேள்வி எழுப்பினார். மேலும் பாஜகவும் காங்கிரஸும் இணைந்து தமிழகத்திற்கு எதிராக சதி செய்கிறது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மேகதாது குறித்து பேசினால் NDA- விலிருந்து வெளியேறத் தயார் என்றும் சவால் விட்டார். ஒரே ஒரு வார்த்தை தமிழகத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசுவாரா என்றும் கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அன்புமணியை சாடினார். ராகுல்காந்தி பிரதமராக உள்ளாரா? மேகதாது விவகாரத்தில் பிரதமர், கர்நாடக முதல்வர், தமிழக முதல்வர் ஆகிய 3 பேர் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி, உதயநிதி, எதிர்கட்சிகள் முக்கியம் கிடையாது. பிரதமரிடம் கேட்க தான் தைரியம் இருக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: ராகுல் பேசட்டும்... கூட்டணியை உடைக்கத் தயார்... காவிரி விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்..!!
என்.டி.ஏ.விற்கு ஆதரவு தரும் அன்புமணி, பிரதமர் மோடியிடம் சொல்ல வேண்டியது தானே. பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை பேசுகிறாரா என்று பார்ப்போம். ராகுல்காந்தி பிரதமர் ஆயிட்டால் கேட்கலாம். தமிழ்நாடு உரிமையை கேட்போம். அன்புமணி இதில் அரசியல் செய்ய் கூடாது என கூறினார். தான் மட்டும் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வது போல்வும், முதல்வர் உள்பட மற்ற கட்சிகள் தமிழகத்திற்கு எதிராக இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என கூறிய மாணிக்கம் தாகூர், தமிழக மக்கள் ஏமாற கூடியவர்கள் கிடையாது என்றார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!