பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். காலை 5 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். தற்போது மேலும் 5 மாவட்ட நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது, தனது உறுப்பினர் அட்டையை எடுத்துக்காட்டி செய்து நிர்வாகிகளிடையே உரையாற்றினார். QR கோடு வசதியை பயன்படுத்தி நிதி வசூலிக்கும் நடைமுறை அமல் படுத்தப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தான் எத்தனையோ பதவிகளை பார்த்துவிட்டதாகவும், தன்னை தலைவனாக எண்ணவில்லை. தலைமை தொண்டனாகவே இருக்கிறேன் என்றும் கூறினார். மனதில் நிறைய இருந்தாலும் பேச முடியவில்லை., என் கடிதம்தான் செல்லும்., நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சின்னையா பெரியய்யாவை தெய்வமாக பார்க்கிறார்.. 86 வயது EX எம்எல்ஏ கமலாம்பாள் அதிரடி பேட்டி..!

உறுப்பினர் அட்டைகளை சேர்ப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது 3 வாரத்திற்குள் முடித்திட வேண்டும் என்றும் பாமகவினர் கட்சி பிரச்னைகளை என்னிடம் நேரடியாக கொண்டு வரலாம், நான் தீர்வு தருகிறேன் எனவும் கூறினார். இனி நாம் வேகமாக செல்லலாம் என கூறிய அவர், எந்தத் தடை வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறுவோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை.. சத்தியமா சொல்றேன்.. பெரியய்யா அவரா அப்படி பேசல.. சக்தி கமலாம்பாள் பரபரப்பு பேச்சு..!