அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு விபரங்கள் இன்று வெளியானது. குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாலியல் வழக்கில் வெளியான தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு என தெரிவித்தார். குற்றவாளிகள் நிச்சயமாக தப்பிக்க கூடாது என்றும் சாகும் வரை ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பது பொதுவான பெண்களின் கருத்தாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

பாலியல் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கப்பெற்றாலும், யார் அந்த சார்? அவருக்கு உதவியவர்கள் யார்? தனியாக குற்றம் செய்தாரா? பின்புலத்தில் இருப்பவர்கள் யார்? என்ற எண்ணற்ற கேள்விகள் அந்தரத்தில் தொங்கி நிற்பதாக கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!