அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் sir ஐ காப்பாற்றியது யார் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார். யார் அந்த சார் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிச்சாமி சார் தான் என தெரிவித்தார். தமிழகப் பெண்களின் உரிமைகளை உயர்த்திப் படித்து பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பது நிரூபணமாகி உள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு இந்த தீர்ப்பை சாட்சி என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: SIT - னாலும் தமிழ்நாடு போலீஸ் தான்...அரைவேக்காடு இபிஎஸ்! பந்தாடிய அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு அரசு எடுத்து வைத்த சாட்சியங்கள் மற்றும் வலுவான வாதங்கள் மூலம் விரைவான தீர்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரகுபதி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி முயன்றதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்..! ராஜ்பவனிலிருந்து பறந்த அதிரடி உத்தரவு..!