தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திமுகவின் துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கி வருவது சமீபகாலமாக தீவிரமடைந்துள்ளது. இந்த விமர்சனங்கள் முக்கியமாக 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது அதிகம் வெளிப்படுகின்றன.
உதயநிதி ஸ்டாலின் தனது பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் ஈபிஎஸ்ஸை "பாஜகவின் அடிமை", "துரோகி", "காலைப் பிடிப்பவர்" என்று கூறி, அவரது அரசியல் வரலாற்றை சுட்டிக்காட்டி தாக்குதல் நடத்துகிறார். இந்தப் போக்கு இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போராக மாறி, தமிழக அரசியலை சூடுபிடிக்கச் செய்துள்ளது.

உதயநிதியின் விமர்சனங்களின் மையப்பொருள் ஈபிஎஸ்ஸின் அரசியல் "துரோகப் பட்டியல்" ஆகும். ஜெயலலிதா காலத்தில் அவருக்கு உண்மையாக இருந்த ஈபிஎஸ், பின்னர் சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்றார் என்றும், அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரைத் துரோகம் செய்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்றும் உதயநிதி குற்றம் சாட்டுகிறார். சசிகலாவின் காலில் ஈபிஎஸ் விழும் பழைய புகைப்படத்தை பிரசாரத்தில் காட்டி, "இதுதான் உங்கள் அரசியல் அனுபவம்" என்று நக்கல் அடிக்கிறார்.
இதையும் படிங்க: தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வார்த்தை சரியாக இல்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலத்தில் வேண்டிய கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசிய போது இவ்வாறு தெரிவித்தார். மோசமான வார்த்தைகளை பேசி வருவதாகவும், திமுக தோல்வி பயத்தில் இவ்வாறு செய்வதாகவும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் டயப்பர் போட்ட காலத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏவாக இருந்தவர் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..??