பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவியை தர்மபுரி தொகுதியில் களமிறக்கியுள்ளார். இது பாமகவின் பாரம்பரிய வலிமை மிக்க தொகுதியாகக் கருதப்படும் தர்மபுரியில் கட்சியின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பாமகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சில தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட 15 தொகுதிகளில் தர்மபுரியும் இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சௌமியா அன்புமணி அரசியல் களத்தில் புதிய முகம் அல்ல. அவர் பாமகவின் சுற்றுச்சூழல் அமைப்பான பசுமைத் தாயகத்தின் தலைவராக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறார். சமூகப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

அன்புமணி ராமதாஸின் மனைவியாக மட்டுமின்றி, தனது சொந்த அடையாளத்துடன் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். அவரது தந்தை திருத்தணி பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் பேத்தி என்பதும், குடும்பப் பின்னணி அரசியல் சார்ந்ததாக இருந்தபோதும், அவர் தனது கல்வி மற்றும் சமூகப் பணிகள் மூலம் அறியப்படுகிறார்.சௌமியா அன்புமணியின் முதல் முக்கிய தேர்தல் அனுபவம் 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார் ஸ்டாலின்! என்ன சொன்னாலும் திமுக தோற்க போறது உறுதி - அண்ணாமலை!
இந்த நிலையில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தர்மபுரியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தந்தை செய்த தவறை மகனும் திட்டமிட்டு செய்கிறார் என்றும் கூறினார். பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை தோற்கடித்த இருப்பதாகவும் திமுக மற்றும் காங்கிரசுக்கு தாய்மார்கள் வாக்களிக்க கூடாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார். தொகுதி மறு வரையறையால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இந்த கருணாநிதியை விட்டால் பெரிய பிரச்சனையாகிடும்...” - வாண்டடாக திமுகவை சீண்டிய அண்ணாமலை...!