மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது யூத இனத்தைப் பற்றியும் இஸ்ரேலில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் பகல் காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி குறித்தும் பேசினார். மொத்த மக்கள் தொகையில் புள்ளி இரண்டு சதவீதம் இருக்கக்கூடிய யூத இனம் நான்கு நாடுகளோடு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்., அந்த ஊரில் பார்த்தோமானால் எல்லா பள்ளிக்கூடங்களை மூடி விட்டார்கள்., மருத்துவமனைகளை பதுங்கு குழிகளுக்கு கொண்டு போய் விட்டார்கள்.

நம்மூரில் மட்டும் தான் நம்முடைய வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து ஏப்ரல் 22ஆம் தேதி பகல் காமில், இந்து மதமா என்ற ஒரே காரணத்திற்காக 26 மனிதர்களை தனித்தனியாக நிறுத்தி நிறுத்தி நெத்தி பொட்டில் சுட்டு கொன்றுவிட்டு இந்து மதம் இருக்கக் கூடாது என்கிறார்கள். பதிலுக்கு பதிலாக எல்லை தாண்டி அந்த நாட்டை அடித்து நொறுக்கிணோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!

இன்று, 5 லட்சம் பேர் மதுரையில் காசு கொடுக்காமல், மழை வரும் என்று தெரிந்தும், கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தும், கடைகோடியில் உள்ள தன்னை மதிப்பார்களா என்று இல்லாமல், இது என்னுடைய மாநாடு என் வாழ்வியல் முறையை காட்டக்கூடிய மாநாடு என்று அனைவரும் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். அனைவரும் இணைந்து இருப்பது வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக., கேள்வி எழுப்புவதற்காக என்றும் இன்றிலிருந்து கேள்வி கேட்க ஆரம்பிக்க வேண்டும்., பிரச்சனை என்றால் தட்டிக் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான கோவில்கள் 344 இந்து சமய அறநிலைத்துறைக்கு கீழ் உள்ளது. எங்கேயாவது ஒரு இடத்திலாவது அறநிலைத்துறை செயல்பாடு ஒழுங்காக இருக்கிறதா என்று கேட்டு பாருங்கள்., பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரி, பணம் இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரி என அண்ணாமலை கூறினார். அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும் முருக பக்தர்களாக வந்திருக்கும் அனைவரும் வீரபாகுவாக செல்ல வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஐயா சேகர்பாபு அந்த 400 கோடிக்கு கணக்கு சொல்லுப்பா… பொன். ராதா சரமாரி கேள்வி!