மதுரையில் நடைபெற்று வரும் உலக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். மடாதிபதிகள், சன்னியாசிகள் சிறப்பு அழைப்பாளர்கள், பாஜகவின் மூத்த நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பொதுமக்கள் அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த மாநாடு நடைபெறக்கூடாது என்று நினைக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு அறநிலைத்துறை அமைச்சர் இந்த மாநாடு நடக்கக் கூடாது என்பதற்காக விரதம் இருந்ததாகவும், இந்த மாநாட்டை சேகர்பாபு, திருமாவளவன், வைகோ அதிக விளம்பரத்தை செய்ததாகவும், இப்படிப்பட்ட விளம்பரத்தை ஏற்படுத்திய அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். அவன் கல்யாணம் வர வேண்டுமா என கேட்கிறார்., 400 கோடியில் மாநாட்டை நடத்துகிறோம் என்று சொல்லுபவர் அந்த காசு எங்கிருந்து வந்தது என கூற வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

கோவில் கும்பாபிஷேகம் செய்கிறேன் எனக் கூறுகிறார் சேகர்பாபு., எந்தெந்த கோவில்களில் எந்தெந்த தொழிலதிபர்கள் பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார். ஆரம்பத்தில் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டை தொடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதாகவும், பல்வேறு கெடுபிடிகள் இருந்ததாகவும் கடைசியாக நாங்கள் நீதிமன்றம் சென்று வென்றதாகவும் தெரிவித்தார். கடலா கடல் அலையா என கேட்கும் அளவிற்கு கூட்டம் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடி தூள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..! அலைகடலென திரளும் பக்தர்கள்..!