ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை மீண்டும் தொடங்கியது. பட்ஜெட் அமர்வின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், உறுப்பினர்கள் கேள்வி நேரம் முதலில் நடைபெற்றது.

சபாநாயகர் தலைமையில் தொடங்கிய அமர்வில், பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இன்றைய கேள்வி நேரத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஸும், கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜியும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணன் சீர் திட்டம்..!! ரூ.812 கோடி நிதி... குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!
தொழிலாளர் நலன் தொடர்பான பிரச்சினைகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை குறித்து உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பர்வேஸ் விளக்கம் கொடுக்கிறார். அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதாகவும், திறன் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்து, துறையின் செயல்பாடுகளை விளக்கி வருகிறார்.
இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள்..? மதிக்குமா தவெக அரசு... வேல்முருகன் சரமாரி கேள்வி.!!