பொள்ளாச்சியில் உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் மனநலம் பாதித்த இளைஞர் வருண் காணாமல் போனதாக கூறப்படுகிறது. சிறுவன் காணாமல் போனதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில் சிறுவனை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக மனநல காப்பகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் கிரிராம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

பின்னர், மேற்பார்வையாளர் நிதீஷ் மற்றும் பணிப்பெண் ரங்கநாயகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து தோட்டத்திலிருந்து சிறுவனின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ஷாஜி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி மேலும் ஒருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

இந்த வழக்கில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் கைதாகி உள்ளனர். மனநல காப்பகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன்கள் இரண்டு பேர், காப்பகத்தின் பங்குதாரர் ஷாஜி உட்பட ஐந்து பேர் கைது கைது செய்யப்பட்டனர். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!