தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு இளைஞர்கள் வெளியிட்ட மிரட்டல் காணொளியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். “பாரத் மாதா கி ஜெய் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்” என அந்த இளைஞர்கள் காவல்துறையினர் முன்னிலையிலேயே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த காணொளியைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்தைக் கேட்டவுடன் கொதித்தெழும் அளவுக்கு அந்த இளைஞர்களின் மனநிலை எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தனக்கு மனம் குழம்புவதாக நாகேந்திரன் தெரிவித்தார். சுற்றிலும் காவல்துறையினர் இருக்கும்போதே பயங்கரவாதத் தொனியில் மிரட்டும் அளவுக்கு அவர்களுக்குத் தைரியம் கொடுத்தது யார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

தமிழக இளைஞர்களைத் தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னணியில் செயல்படுகிறதா என்ற சந்தேகமும் தனக்கு எழுவதாக அவர் குறிப்பிட்டார்.சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று பின்னர் விடுதலை செய்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் பின்னணியையும் தீவிரவாதச் சிந்தனையையும் முறையாகவும் தீர விசாரிக்க வேண்டும் என நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!
அத்துடன், தமிழகத்தின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர்களின் மனநிலை தொடர்பாக தனது கவலையையும் நயினார் நாகேந்திரன் முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!