தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 4, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு நாளை (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: விமான விபத்து எதிரொலி! மூணு மாசம் தான் கெடு... எல்லா விவரங்களும் கைக்கு வரணும்! ராம் மோகன் நாயுடு அதிரடி...

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தப்படும் ஓஎம்ஆர் (OMR - Optical Mark Recognition) விடைத்தாளில் கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரவிருக்கும் தேர்வுகளுக்கு பொருந்தும், மேலும் விண்ணப்பதாரர்கள் புதிய வடிவமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் தேர்வு எழுதி முடிந்ததும் எத்தனை வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம், எந்தெந்த கேட்டகிரி (A, B, C, D)-யில் விடைகள் அளிக்கப்பட்டது என்பது பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். தற்போதுள்ள OMR தாளில் கேட்டகிரி வாயிலாக பதில்களின் விவரங்களை பூர்த்தி செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.300 கோடிக்கு வீடு... டாஸ்மாக் காசில் கெட்ட ஆட்டம் போட்ட உதயநிதி நண்பர்... திமுக குட்டை உடைத்த நயினார்...!