சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியாராஜன் தலைமையில் தொடங்கியுள்ளது. குறிப்பாக இன்றைய மாமன்ற கூட்டத்தில் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் கூட்டம் துவங்கியது முதலில் கேள்வி நேரம் பேசப்பட்டது. அப்பொழுது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேச வந்தார். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் பேச ஆரம்பித்தார். அப்பொழுது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ் குமார் இது கேள்வி நேரத்தில் மட்டும் தான் பேச வேண்டும்.

இப்பொழுது பேசக்கூடாது என எதிர்ப்பு செய்தார். அது மட்டுமல்லாமல் அங்கிருந்த திமுக கவுன்சிலர் உடனடியாக இங்கு பேசுவதற்கு தற்போது பேசுவதற்கு அனுமதி இல்லை என வாக்குவாதம் செய்தனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இப்படி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில், திமுக கவுன்சிலர் ஒருவர் சின்சியராக தனது ஸ்மார்ட் போனில் சின்சியராக ரீல்ஸ் பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாக்., தளபதி.. மீண்டும் காஷ்மீர் பிரச்னையை தூண்டிவிட திட்டம்..!

குறிப்பாக மாநகர மேயர் பிரியா சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்த போது, கவுன்சிலர் ஒருவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் போனை நோண்டிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: என்னைக்குமே DMK தான் மாஸ்! ஏன் தெரியுமா..? TKS சொன்ன சீக்ரெட்..!