திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயர சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு திமுகவின் ஊழல் மற்றும் மெத்தனப் போக்கு காரணம் என்று அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழலில் தலைசிறந்து விளங்குவதாகவும், 450 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து கிட் முறைகேடு மற்றும் 4,600 கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் கொள்ளை ஊழல் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் திமுக அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்குவதாகவும், பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அடிப்படையின்றி கைது செய்வதாகவும் பாஜகவினர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளா? பேசவே இல்லை... வைகோ பரபரப்பு தகவல்!!

இந்த நிலையில், டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஒரு அவர் பேசியதாவது; எங்கெல்லாம் குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வருகிறதோ., அங்கெல்லாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். திமுக அரசு எதையும் பார்த்துக் கொண்டு இருக்காது. எந்த வழக்கிலும் குற்றவாளிகள் அகப்படாமல் இல்லை... எல்லா வழக்குகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்தியாவிலேயே ஒரு மாநில கட்சி 75 ஆண்டுகள் ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால், இன்றைக்கும் சிறப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியாக இருக்கிறது என்றால் அது திமுக தான். காரணம் புதிது புதிதாக இளைஞர்கள் வந்து கொண்டு இருப்பார்கள், கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக திமுகவின் பண்பாட்டையும், மொழி அருமையும் மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக அவர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்... அன்புமணி பரபரப்பு தகவல்!!