தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜில்லுனு ஒரு கிளைமேட்.. சென்னையில் செம மழை! மக்கள் நிம்மதி..!

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், கொரட்டூர், திருமுல்லைவாயில், திருநின்றவூர், கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், முகப்பேர் பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி நசரத்பேட்டை செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிடம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதையும் படிங்க: சென்னையில் ஜில் கிளைமேட்! ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!