தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் தற்போது காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் 2 மணி மழை நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏழு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! உஷார் நிலை தீவிரம்..!

ஐந்து மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது
இதையும் படிங்க: சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி! பொதுமக்கள் கலக்கம்...