தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் விவாதம் நடைபெற்றது.
இன்று முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஊழல், மின்வெட்டு, கோவில் நிர்வாக சீர்கேடு, என பல விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். எதிர்க்கட்சிகளை பந்தாடிய முதல்வர் விஜய் கொளத்தூர் தொகுதியை குறிப்பிட்டு பேசினார்.

ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூர் தொகுதி ஆட்டம் கண்டதாக கூறியுள்ள முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் கைசைகையை செய்து காண்பித்தார். இது குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் கருத்துக் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்டிக்கதையா..? செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி..! உதயநிதி விளாசல்..!
தவெக நிர்வாகி லயோலா மணி கூறிய கருத்தில் மிகவும் சிறப்பு தலைவா . வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இன்றைய சட்ட மன்ற நாள் இருக்கும் என்றார். ஒரே ஒரு வருத்தம்தான். இந்த Action யை மாண்புமிகு உதயநிதி நேரில் பார்க்காமல் போய்விட்டாரே என்ற ஒரே ஒரு வருத்தம்தான் என்றும் கூறினார். திமுக,ஒமுக வாக மாறி இன்று வெமுக வாக உருமாறி விட்டது என்றும் வெளிநடப்பு முன்னேற்றக் கழகம் என்று அன்புடன் அழைப்போம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை! முதல்வர் விஜய் கறார்! நால்வரும் அதிர்ச்சி!