தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை பதவியேற்றார். இதன்மூலம் மாநிலத்தின் 13வது முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சர் பதவியின் பிரமாணத்தை செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பின்னர், தலைமைச் செயலகத்துக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு அதிகாரிகளுடன் சந்தித்து முறையாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
பதவியேற்ற உடனேயே மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டத்தை அவர் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலத்தில் அமைதியான சூழலை நிலைநாட்டுவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, ஏதேனும் சமூகப் பதற்றங்கள் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சட்டம்-ஒழுங்கை முதன்மைப்படுத்தி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவராக பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து குரல் கொடுத்து வந்த விஜய், தற்போது நிர்வாகப் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், அவரது தலைமையில் தமிழகம் புதிய பாதையில் செல்லும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பது, அரசு இயந்திரத்தை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விரைவில் திட்டங்கள் வகுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: முதல்வர் சேரில் கெத்தாக உட்கார்ந்த விஜய்..!! நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு..!!
பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த மாற்றம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொடங்கியது விஜயின் சர்கார்..!! மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.. CM விஜய் அதிரடி..!!