கோவை மாவட்டம் இருகூர் அருகே நேற்று இரவு காரில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடத்தப்பட்ட இளம் பெண் யார் என்பது தொடர்பாகவும், வெள்ளை நிற காரில் வந்து கடத்திய நபர்கள் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இளம் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை வெள்ளை நிற காரில் வந்த சில நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் உடனடியாக தகவல் கொடுத்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளம் பெண் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் அந்த வெள்ளை நிற காரானது எங்கு சென்றது என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: நாட்டை உலுக்கிய கோவை பாலியல் சம்பவம்..!! 3 கொடூரன்களை காலில் சுட்டுப்பிடித்த போலீசார்..!!
இளம் பெண் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட இளம் பெண் யார் என்பது தொடர்பாகவும் கடத்தியது யார் எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொணடு வருகின்றனர். அது மட்டுமல்லாது இளம் பெண் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோவையில் இளம் பெண்களுக்கு எதிராக நிகழும் அடுத்தடுத்த குற்றச்சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!