மதுரையில் இந்து முன்னணி சார்பில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பல முக்கிய முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மாநாட்டில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது, மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த உத்தரவை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனிடையே மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில்,"மதத்தை அரசியல் கலந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பரப்புரையாக இந்த மாநாட்டை நடத்தி தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியதோடு முருக பக்தர்களையும் அவமானப்படுத்தி உள்ளனர்,மாநாட்டில் மதவெறியை தூண்டும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.இந்த மாநாட்டில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் ஆகியோர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை ,அரபிய மதம் வெளிநாட்டு மதம் என்றும் 2055 - ல் மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும் ஆதரித்து பேசியுள்ளனர்.இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே மதவெறியை தூண்டி, வெறுப்பை வன்முறையை விதைத்து தமிழ்நாட்டின் அமைதி வளர்ச்சியை சீர்குலைத்து நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தி மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியை தூண்டும் விதமாக பேசியதாகவும், மதுரையின் மதமல்லிணக்கத்தை சீர்குலைத்து தமிழ்நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் காடேஸ்வர சுப்பிரமணியன், முத்துக்குமார் புதிய தண்டனை சட்ட விதிகளின்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!
இதையும் படிங்க: பொறுப்பு வந்ததும் பொருத்தமில்லாத பேச்சு... நயினார் நாகேந்திரனை எச்சரித்த வைகோ...!