தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ போஸ்டரின் மூலம் பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளின் இணைவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. “பாஜக + திமுக + அதிமுக = கொள்கை புலங்காய்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ஒரு புடலங்காய் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிறப் பகுதியில் பாஜகவின் தாமரை சின்னம், கருப்பு நிறப் பகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னம், பச்சை நிறப் பகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இடம் பெற்றுள்ளன. இந்தப் படிமம் மூலம் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களை ஏமாற்றும் “கொள்ளைக்கூட்டணி” என்பதை சிபிஐ(எம்) சாடியுள்ளது.போஸ்டரின் அடிப்பகுதியில் சிவப்பு நிறப் பின்னணியில் சிபிஐ(எம்)வின் சின்னமான சுத்தி மற்றும் அரிவாளுடன், “சிபிஐ(எம்)க்கு எப்போதும் இல்லை” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம், மக்களின் நலனுக்கு எதிரான இந்தக் கூட்டணிக்கு தங்கள் கட்சி ஒருபோதும் இடம் கொடுக்காது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. சிபிஐ(எம்) வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், “தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளில் இந்த மூன்று கட்சிகளும் தங்கள் அரசியல் நலனுக்காக ஒன்று சேர்ந்து செயல்படுவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு கொள்ளைக்கூட்டணி.
இதையும் படிங்க: அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!
மக்களுக்கு எதிரான எந்தக் கூட்டணிக்கும் எதிராக சிபிஐ(எம்) தொடர்ந்து போராடும்” என்று தெரிவித்தனர்.இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல் சூழலில் கட்சிகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் கூட்டணி அரசியல் குறித்த விவாதங்களுக்கு இந்த போஸ்டர் மேலும் வலு சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: மாநில உரிமைகளில் ஊசலாட்டம் கூடாது..! தவெக அரசுக்கு CPM கட்சி வலியுறுத்தல்..!!