கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் இவரது நண்பர்கள் நேற்று இரவு கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது வெங்கடேசன், ஐயப்பன், ஆதினேஷ், வேலு, கௌதம், நடராஜ், ஆகிய ஆறு பேரும் நள்ளிரவு ஷிப்ட் டிசையர் காரில் விருத்தாச்சலம் டீக்கடையில் டீ குடிப்பதற்காக சேலம் புறவழிச் சாலை வழியாக சென்றுள்ளனர்.
அப்பொழுது மணவாளர் நல்லூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் கார் மோதியதில் ஆறு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இதனை அறிந்த அப்பகுதி வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்ட இளைஞர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலே ஐயப்பன், ஆதினேஷ் இறந்தனர் மீது நான்கு பேர் வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ், ஆகிய நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூ, நடராஜ் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு வேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த விபத்தில் மூன்று வாலிபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பெரும் சோகம்.. நேருக்கு நேர் மோதிய கார்கள்.. தீயில் கருகி 8 பேர் உயிரிழப்பு...!
இதையும் படிங்க: ஆட்டோ பார்க்கிங் காரால் நேர்ந்த கொடூரம்... உயிருக்கு போராடும் கார் உரிமையாளர் - நடந்தது என்ன?